Categories: சினிமா

CWC-ல் வெங்கட் பட்-ஐ தொடர்ந்து செஃப் தாமுவும் வெளியிருகிறாரா..? என்னப்பா சொல்றீங்க.? ஓ.. இதான் காரணமா..

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்க்களில் ஒன்று குக் வித் கோமாளி. கொரோனா லாக்டவுன் சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவை பெற்று மூன்று சீசன்களை கடந்தது. தற்பொழுது 4வது சீசன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இறுதி  கட்டத்தையும் எட்டியுள்ளது.


இந்த சீசனில் மூன்று சீசன்களிலும் கோமாளியாக கலக்கிய சிவாங்கி குக்காக களமிறங்கி கலக்கி வருகிறார். ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொடுக்க முடியும் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசனும் நிரூபித்துள்ளது. தற்பொழுது ரசிகர்களின் பேராதரவை பெற்று குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஆனது இறுதி நிகழ்ச்சியில் மாபெரும் சர்ப்ரைஸ் நடந்துள்ளது.

கோமாளியாக இருந்து குக் ஆக 4 சீசன் களமிறங்கிய சிவாங்கி தான் டைட்டிலை வின் செய்வார் என்று நினைத்தார்கள், ஆனால் மைன் கோபி அவர்கள் டைட்டில் வின்னிகை தன் வசம் இழுத்துக் கொண்டார். தற்போது இவ்வளவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளியின் சீசன் 5 எப்பொழுது என்று எதிர்பார்த்த பல ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதாவது தொகுப்பாளராக இருந்த வெங்கடேஷ் பட் அவர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் என்று தற்போது தெரிவித்திருந்தார், இந்த நிகழ்ச்சியில் பெரும் ஆதரவைப் பெற்ற அவர் நிகழ்ச்சியை விட்டு செல்வதால் பலரும் ஏக்கத்தில் இருந்தார்கள்.

ஆனால் இவருக்கு பதிலாக நடிகரும் செஃப் ஆன மதக்கம்பட்டி ரங்கராஜன் அவர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்னால் வெங்கடேஷ் பட் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் தான் மட்டும் வெளியேறவில்லை என்னை தொடர்ந்து அவரது பார்ட்னரான செஃப் தாமு அவரும் வெளியேறப் போகிறார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு பின்னர் இணைய பக்கத்தில் பதிவு ஒன்று போட்டிருந்தார், என் நண்பன் என்னை போல தான், நான் எங்கு சென்றாலும் வருவான் என்று மறைமுகமாக அவர் வெளியேறுவதை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வரிசையாக தொகுப்பாளர் இயக்குனர் என்று தற்போது செஃப் வரையும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எல்லாரும் வெளியேறுகிறார்களா? அல்லது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோஷன் செய்வதற்கு பல பொய்யான தகவல்களை வெளியிடுகிறார்களா? என்று தெரியவில்லை, இன்னும் சில நாட்களில் சீசன் 5 காண ப்ரமோஷன் வீடியோ வெளியாகும், அப்பொழுதுதான் இந்த நிகழ்ச்சியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவரும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, எந்த செய்தியும் தற்போது வரை நம்ப முடியாத விஷயமாக உள்ளது.

Ranjith Kumar

Recent Posts

“காப்பாற்றுங்கள்!… பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ்?… கண்ணீருடன் கெஞ்சும் குடும்பத்தினர்… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக்…

2 seconds ago

HI செல்லம்..! CM பையன் துணை முதலமைச்சர் ஆகும்போது… ஒரு டிரைவர் பையன் MLA ஆகக்கூடாதா..? பிரகாஷ்ராஜுக்கு ராஜ்மோகன் பதிலடி..!!

நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ் மோகன் ஆவேசமாகப்…

7 minutes ago

BIG BREAKING: NEET மறுதேர்வுக்கான தேதி அறிவிப்பு..!!

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

13 minutes ago

“நீ இருக்கிறதை விட செத்துரு” திருமணமான 15 நாளில் கணவரைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓட்டம்… பிடிவாதம் பிடித்த மகளை நெஞ்சில் சுட்டுக் கொன்ற தந்தை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான கௌரவக் கொலைச் சம்பவத்தை இந்தத் தகவல் விவரிக்கிறது. நிதி…

21 minutes ago

திமுகவிற்கு அதிர்ச்சி..! 500 பேருடன் தவெகவில் ஐக்கியமான கொளத்தூர் திமுக அமைப்பாளர்..!!

கொளத்தூர் மேற்கு திமுக இளைஞரணி அமைப்பாளர் திலீப் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…

25 minutes ago

“90 லட்சம் கொடுத்தாதான்” முதலிரவில் மிரட்டிய புதுப்பெண்… சிலிண்டரை திறந்துவிட்டு குடும்பத்தையே உயிரோடு எரிக்க முயற்சி… பகீர் சம்பவம்..!!

திருமணமான முதல் இரவிலேயே மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதுப்பெண் ஒருவர் விசித்திரமான மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும்…

28 minutes ago