தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்வதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு 5000 ரூபாய், கோவைக்கு 3000 ரூபாய், மதுரைக்கு 4000 ரூபாய் என குறைந்தபட்சம் ஒவ்வொரு ஊர்களுக்கும் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
