அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முயன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவில் சீனியர் என்ற மரியாதையே கிடைப்பதில்லை என்றும், முன்னாள் அமைச்சர்களாக இருந்தும் தங்களைச் சந்திப்பதற்குக் கூட தலைமை தரப்பில் நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்றும் அவர் சக நிர்வாகிகளிடம் புலம்பியதாகக் கூறப்படுகிறது.
கடம்பூர் ராஜுவின் இந்த ஆதங்கத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்ற அதிமுக முக்கியப் புள்ளிகள், தவெகவிற்குச் செல்லும் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டு தற்போது அமைதி காத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
