#image_title
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும் திகழ்ந்த சந்திரபாபு சிறந்த நடனக் கலைஞராகவும் திகழ்ந்தவர். அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கென ஒரு தனிப்பாடலையே மெட்டமைப்பார்கள். அந்த பாடலை அவரே பாடி திரையில் தோன்றுவார். அந்தளவுக்கு மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞராக திகழ்ந்தவர்.
அதே காலகட்டத்தில் சந்திரபாபு கதாநாயகனாக நடித்த “கவலை இல்லாத மனிதன்” என்ற திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்தில் “பிறக்கும்போதும் அழுகின்றாய்” என்ற ஒரு பாடலை சந்திரபாபு தனது சொந்த குரலில் பாடியிருந்தார்.
அந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஒரு விழாவில் அவர் முன் சந்திரபாபுவிற்குப் பாட வாய்ப்பு அமைந்தது. அந்த விழாவில் அவர் “பிறக்கும்போதும் அழுகின்றாய்” பாடலை டாக்டர். ராதாகிருஷ்ணன் முன் பாடினார்.
சந்திரபாபு பாடி முடித்தவுடன் டாக்டர்.ராதாகிருஷ்ணன் சந்திரபாபுவை புகழ்ந்து பாராட்டினார். அப்போது திடீரென சந்திரபாபு ஜனாதிபதியின் மடியில் தாவி அமர்ந்து அவர் தோளில் கையைப் போட்டார். அதன் பின் ஜனாபதியின் கன்னத்தை தடவியபடி “நீ ரசிகன்டா” என்று கூறினார்.
சந்திரபாபுவின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அரண்டுப்போனார்கள். ஆனால் டாக்டர்.ராதாகிருஷ்ணனோ சந்திரபாபுவின் செயலால் ஆத்திரமடையாமல் அவரை தட்டிக்கொடுத்துப் பாராட்டினாராம்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…
அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…
கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…
பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…