பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் தங்குவதில்லை என்று புலம்புபவர்களே நம்மில் அதிகமாக உள்ளனர். நீங்கள் செல்வந்தராக வாழ சாணக்கியர் காட்டும் வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் பணம் தங்காமல் போக என்னென்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
செலவை கட்டுப்படுத்துங்கள் – யாருடைய செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளதோ அவர்களின் நிதி வாழ்க்கை எப்போதும் நிலையற்றதாகவே இருக்கும் என்கிறார் சாணக்கியர்.
பணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் – மற்றவர்களுக்கு காட்ட பணம் செலவழிப்பது முட்டாள்தனம். பணத்தை சரியாக பயன்படுத்துங்கள் என்பதும் சாணக்கியர் சொல்லும் முக்கிய அறிவுரை.
முதலீடு – எங்கு பணம் முதலீடு செய்யப்படுகிறதோ அங்குதான் பணம் பெருகும். தவறான இடத்தில் முதலீடு செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தும். சம்பாதிப்பது மட்டும் போதாது. பணத்தை தக்க வைத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.
நிதி ஆலோசனை – பணம் நிர்வாகம் குறித்த நிதி ஆலோசனைகளை பெறுங்கள். மாதாந்திர சேமிப்புகளை செய்யுங்கள். பணத்தை தக்க வைக்க அறிவு வேண்டும் என்கிறார் சாணக்கியர். எனவே பணத்தை சிக்கனமாக பயன்படுத்துவது சேமிப்பது தக்க வைப்பது என முக்கிய அறிவுரை சாணக்கியர் தந்திருக்கிறார்.
