Categories: CINEMA

2023-ல் ஏற்பட்ட திடீர் 5 மரணங்கள்.. குணசேகரனாக மனதில் சிம்மாசனமிட்ட நடிகர் மாரிமுத்து..

இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். இதில் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால் இறந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர் நடிகர்கள்.  ஒரு சில நடிகர்களின் இறப்பிலிருந்து ரசிகர்களால் தற்பொழுது வரை மீண்டு வர முடிவதில்லை. அப்படி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து மறைந்த ஒரு சில பிரபலங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

நடிகர் மாரிமுத்து:

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன்  கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களில் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் நடிகர் மாரிமுத்து.  இவர் எதிர்நீச்சல் சீரியல் டப்பிங்கின் போது  மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார் இவரின் மறைவை தற்போது வரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நடிகர் மயில்சாமி:

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. மக்கள் மத்தியில் தனது காமெடியின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்தவர்.  தீவிர சிவ பக்தன் ஆன இவர் சிவராத்திரி அன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உதவும் குணம் பற்றி நமக்கு சொல்ல சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு அனைவருக்கும் உதவக் கூடியவர். இவரது இழப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர் மனோபாலா:

தமிழ் சினிமாவின் பல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியவர் நடிகர் மனோபாலா. இவர்  திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். ஒல்லியான தோற்றமும்,  எதார்த்தமான உடல் மொழியும் இவரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. 69 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்ட னி. இவரது மகள் மீரா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக இவர் எடுத்த இந்த முடிவு தற்பொழுது வரை அவரது குடும்பத்தில் மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது.

பங்காரு அடிகள்:

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகள். இவர் ஆசிரியராக பணி புரிந்தவரும் கூட. ஆசிரியராக இருந்த இவர் அருள்வாக்கு கூறுதல், வேப்பிலை மந்திரத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். உலகில் உள்ள எந்த ஒரு இந்து கோயில்களிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை அனுமதிப்பதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் தீட்டு என்பதை தகர்த்தெறிந்தவர் பங்காரு அடிகளார். இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது மரணம் தற்பொழுது வரை அவரது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago