சுஜான்கடில் உள்ள அரசு மருத்துவமனையில், நோயாளி காத்திருக்கும் பகுதியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து அவர் தலையில் விழுந்தது. இந்த அதிர்ச்சி சம்பவம் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து நேராக அவரது தலையில் பலமாகத் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்ததைக் கண்டு, அங்கிருந்த மற்ற நோயாளிகளும் ஊழியர்களும் உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையின் பராமரிப்புக் குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து நோயாளிகளின் உறவினர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
