சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20.22 TMC தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் CWMA தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெற்ற 44-வது ஆணைய கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
