முன்னாள் அமைச்சர் மற்றும் சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பி. கே. சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று, சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் நேரடி மோதல் ஏற்பட்டது.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக தவெக வேட்பாளர் அசோக் சினோரா மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்து தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை துறைமுகம் தொகுதியில் அசோக் சினோராவை தோற்கடித்து சேகர்பாபு மீண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
