சந்தோஷமா கிளம்புனாங்க…! ஆனா பிணமா திரும்பிய சோகம்… பறந்து வந்து கவிழ்ந்த கார்… 3 பேர் பலி… கதறும் கல்லூரி மாணவர்களின் குடும்பங்கள்…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

சென்னை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர், புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் கோர விபத்தில் சிக்கினர். இவர்கள் பயணித்த கார் செங்கல்பட்டு அடுத்த சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானதில், மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற நான்கு மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த மோசமான விபத்தினால், அப்பகுதியில் சிறிது நேரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். மேலும், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.