அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) அபுதாபியில் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், கேமரூன் கிரீனை ₹25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்த மினி ஏலத்தில் வாங்கப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும். மேலும், ஐபிஎல் தொடரின் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட 3வது வீரர் என்ற சாதனையையும் கேமரூன் கிரீன் படைத்துள்ளார்.
