அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக தவெக தலைவர் விஜய், அதிமுகவினரை பெருமளவில் ஊழல்வாதிகள் என்று கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதே அதிமுகவினரைத் தான் தவெகவிற்குள் அதிகளவில் சேர்த்துக்கொண்டு வருகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்று ஒரு சில மாதங்களிலேயே மக்கள் பிரதிநிதிகள் ஏன் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு முறையான விளக்கம் கிடைக்காத வரை, தமிழ்நாட்டில் எந்தவொரு இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தக்கூடாது என்றும் அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
