தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தினரை புயலால் பாதிக்கப்பட்டுருக்கு உதவுங்கள் என்று உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் பலரும் ஆங்காங்கே மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். வீடியோக்கள் போடாமல் பல விஜய் ரசிகர்கள் தொண்டு செய்து வருகின்றனர். அதேசமயம் மக்கள் இயக்க போஸ்டரை தூக்கிக்கொண்டு தொண்டர்கள் பலரும் உதவி செய்த நிலையில் அது விமர்சனத்திற்கு உள்ளானது.
அதையெல்லாம் ஓரம் கட்டி தற்போது புஸ்ஸி ஆனந்த் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தானும் மக்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர் களத்தில் இறங்கிய நிலையில் ஏற்கனவே சாலையோரம் உள்ள குப்பை தொட்டி அருகே குப்பைகள் இருந்துள்ளன. அதை அள்ளி மீண்டும் அதே இடத்தில் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள். இருந்தாலும் களத்தில் இறங்கி அவர் வேலை செய்தாலும் குறை சொல்றீங்களே என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…