உத்தரபிரதேசத்தின் பாக்பத்தைச் சேர்ந்த 30 வயதான ஹர்ஷித் ஜெயின், ஒரு சமண துறவியாக வாழ்வதற்காக கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து மற்றும் தொழிலைத் துறந்துள்ளார். டெல்லியில் ஒரு வெற்றிகரமான ஆடைத் தொழிலதிபராக இருந்த ஹர்ஷித், இப்போது தனது வீடு, கார், தொழில் மற்றும் அனைத்து உலக உடைமைகளையும் விட்டுவிட்டு, துறவியாக மாறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ஹர்ஷித்தின் வாழ்க்கை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. பயம், தனிமை மற்றும் மனித தொடர்புகளின் முறிவு அவரை மிகவும் பாதித்தது. குடும்பங்கள் தங்கள் சொந்த நோய்வாய்ப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து தூரமாக வைத்திருப்பதையும், இறுதிச் சடங்குகளைச் செய்யத் தயங்குபவர்களையும் பார்த்தததும் அவருக்குள் ஒருவிதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தருணங்கள், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் தனக்கு உணர்த்தியதாக அவர் கூறுகிறார். “ஒரு நபர் இந்த உலகத்திற்கு தனியாக வந்து இறுதியில் தனியாகச் செல்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்,” என்று அவர் யோசித்தார். தொற்றுநோய்க்குப் பிறகு 4 ஆண்டுகளுக்கு, அவர் வாழ்க்கையின் நோக்கத்தை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கினார், படிப்படியாக ஆன்மீகம் மற்றும் சமண தத்துவத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். சமணத் துறவிகளுடனான தொடர்பு அதிகரித்து வருவதால், ஹர்ஷித் இறுதியாக துறவறத்தில் முறையான தீட்சை எடுக்க முடிவு செய்தார்.
