BREAKING: அதிகாலையில் 5 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

By Soundarya on வைகாசி 31, 2026

Spread the love

திண்டுக்கல் சாலக்கடை அருகே அதிகாலையில் ஐந்து பேருந்துகள் அடுத்தடுத்து மோதி ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் மொத்தம் மூன்று அரசுப் பேருந்துகளும், இரண்டு தனியார் பேருந்துகளும் சிக்கின. இவற்றில் பயணம் செய்த சுமார் 30 பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.