“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on சித்திரை 19, 2026

Spread the love

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water Tank) தனது தலையை நுழைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தலையை வெளியே எடுக்க முடியாமல் தொட்டி காளையின் கழுத்தில் பலமாக மாட்டிக்கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காளை, பயத்தில் சந்தை வீதிகளில் அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

 கழுத்தில் பெரிய தண்ணீர் தொட்டியுடன் ஒரு காளை சீறிக்கொண்டு வருவதைக் கண்ட பொதுமக்கள் சிதறி ஓடினர். காளை ஓடும் வேகத்தில் தொட்டி அங்கிருந்த கடைகளிலும், வாகனங்களிலும் மோதியது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. காளையைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அதற்கு உதவவோ யாரும் முன்வர முடியாத அளவுக்கு அது ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

   

 நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அங்கிருந்த உள்ளூர் மக்களும் இளைஞர்களும் துணிச்சலாகச் செயல்பட்டு காளையை ஒரு இடத்தில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் கத்தரிக்கோல் மற்றும் பிளேடு போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, காளையின் கழுத்தில் மாட்டிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் தொட்டியை மிகவும் கவனமாக வெட்டி எடுத்தனர். ஒருவழியாக காளை காயமின்றி மீட்கப்பட்டது, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.