ஹைதராபாத் பரத்நகரில் உள்ள ‘லிவிங் ட்ரீ சூட்ஸ்’ விடுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறை முன்பதிவு செய்வதற்காக வந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்களிடம், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அடையாளச் சான்றைக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்நபர்கள், “நாங்கள் உள்ளூர்வாசிகள், எங்களிடமே அடையாளச் சான்று கேட்கிறாயா?” என்று ஊழியர்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், அவர்கள் மரக்கட்டைகளால் சுத்தம் செய்யும் ஊழியரான ஆகாஷ் என்பவர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
https://twitter.com/TV9Telugu/status/2084535286340768243/video/2
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து சனத்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
