புனேயின் சிங்ஹகாட் கோட்டையில் சுற்றுலா வந்த குடும்பத்தினர் அணிந்திருந்த உடை “சரியானதாக இல்லை” எனக் கூறி, ‘கோட்டை பாதுகாப்பு சங்கம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் வன்முறையாக மாறி, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலர் இரண்டு மணி நேரமாகத் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகினர். இது தொடர்பாக ஹவேலி காவல் துறையினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் வார இறுதி நாளில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, 8 வயது சிறுமி ஒருவர் அரைகால் சட்டை அணிந்திருந்ததைக் கேள்வி கேட்டு இந்தத் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகளைப் தூய்மையாகவும் முறைப்படியும் பராமரிப்பதாகக் கூறிக்கொள்ளும் சில சுயசார்புக் குழுக்கள், சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் ஆடைகள் மற்றும் நடத்தை குறித்து சொந்தமாக விதிகளை விதித்து இதுபோன்ற ‘ஒழுக்கக் காவல்’ நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிங்ஹகாட் கோட்டையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களின் வருகையைக் முறைப்படுத்தவும் ஆப் மூலமாக முன்கூட்டியே பதிவு செய்யும் திட்டத்தை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவிலேயே சுற்றுலாப் பயணிகளுக்காக இத்தகைய முன்-பதிவு முறையைக் கட்டாயமாக்கும் முதல் கோட்டையாகச் சிங்ஹகாட் மாறியுள்ளது.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…