பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வரும் தேர்தலில் பெருந்துறை தொகுதியின் வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிடுவார் எனத் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, வேட்பாளரை இவர் தான் என்று மேடையில் அவர் உறுதிப்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையமே இன்னும் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்யாத சூழலில், மூத்த தலைவர் ஒருவர் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்தது கட்சித் தலைமையையும் ஆதரவாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சட்டப் போராட்டங்கள் காரணமாகப் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் நிலையில், செங்கோட்டையனின் இந்த அதிரடி பேச்சு சர்ச்சையை விசிறிவிட்டுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் அரசியல் பரபரப்பையும் தோற்றுவித்துள்ளது.
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…