உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பதாார்த்தா கிராமச் சந்தைப் பகுதியில், இரு பெண்களுக்கும் சில உள்ளூர் ஆண்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பகிரங்க மோதலாக மாறியது. இந்தச் சம்பவத்தை அங்கே இருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்தச் சாலைப்பக்க மோதலின் போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் இரு பெண்களையும் எட்டி உதைத்தும் தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். சுற்றி ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதும், யாரும் அவரைத் தடுக்க முன்வரவில்லை. இச்சம்பவம் பொதுவெளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2098750871379345653/video/1
இதுகுறித்துத் தகவலளித்த பாத்ரி காவல் நிலைய அதிகாரி ரவீந்திர குமார், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னர் பேருபூர் காவல் சாவடியில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவித்தார். இணையத்தில் வைரலாகும் வீடியோவைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளதுடன், விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…
பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…
தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…
லக்னோவில் உள்ள ககோரி காவல் எல்லைக்குட்பட்ட செம்ராமு கிராமத்தில், பிரேமா யாதவ் என்பவர் புதன்கிழமை இரவு கொடூரமான முறையில் கொலை…
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைத்…
வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை…