பீகாரில் உள்ள பெண்களின் தாய்ப்பாலில் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் உள்ள பெண்களுடைய தாய்ப்பாலில் கதிர்வீச்சை விளைவிக்கும் யுரேனியம் கலந்திருப்பது ஆபத்து என்று கூறப்படுகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனால் பீகாரில் அதிர்ச்சி நிலவி வருகிறது.
