அடபாவிங்களா…! வாட்ஸ்அப்பில் ‘கொலை’ திட்டம்…! லீக் குரூப் சேட்… வசமாக சிக்கிய ஐஐடி மாணவர்கள்… போலீஸ் அதிரடி விசாரணை…!!

By Gayathri on ஆவணி 30, 2026

Spread the love

ஐதராபாத் ஐஐடி வளாகத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை எப்படிக் கொல்லலாம் எனச் சில மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவில் தீவிரமாக விவாதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்களைக் கொடூரமான முறையில் எப்படி அழிக்கலாம் என அவர்கள் திட்டம் தீட்டிய வாட்ஸ்அப் உரையாடல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. இந்தியாவின் மிக முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றைப் சேர்ந்த மாணவர்களின் இந்த இரக்கமற்ற செயல், விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

இந்த வைரலான குழு உரையாடல்களில், நாய்களை அடித்துக் கொல்வது அல்லது வேறு வழிகளில் அவற்றைத் தீர்த்துக்கட்டுவது போன்ற பல்வேறு கொடூரமான வழிமுறைகளை மாணவர்கள் தங்களுக்கிடையே பரிமாறிக் கொண்டுள்ளனர். இது வெறும் சாதாரண அரட்டை அல்ல, நாய்கள் மீதான கடுமையான வெறுப்புப் பிரச்சாரம் என்பது உறுதியானதும், பலரும் இணையத்தில் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். எதிர்காலத்தில் சமூகத்தில் உயர்ந்த பொறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய இளைஞர்கள், வாயில்லா ஜீவன்கள் மீது இவ்வளவு வன்மத்தைக் கக்குவது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

   

இந்தப் பிரச்சனை இணையத்தில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர். விலங்கு நல அமைப்புகள் மற்றும் நெட்டிசன்கள் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த மாணவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஐடி நிர்வாகமும் உரிய விசாரணையை முன்னெடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.