சென்னை, வேப்பேரியை சேர்ந்தவர் தர்ஷன் (26), ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தர்ஷனுக்கும், ராயபுரத்தை சேர்ந்த ஹாசிதா (25) என்ற பெண்ணுக்கும் இடையே, காதல் மலர்ந்தது. ஹாசிதா ஒரு மாற்றுத்திறனாளி. சிறு வயது முதலே இடது கால் ஊனமுற்றவர். இதை அடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இருவரும் எப்போதும் போல் பேசி, பழகி வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, தர்ஷன் ஹாசிதாவை தொடர்பு கொண்டு, “நீ எனக்கு வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹாசிதா தனது பெற்றோரிடம், “நான் தர்ஷன் உடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, வேப்பெரியில் உள்ள தர்ஷன் வீட்டில், இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்திய பொழுதும், தர்ஷன் மனம் மாறவில்லை. இதனால் மனமுடைந்த ஹர்ஷிதா, 7 ஆவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், தர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…
தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…
கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…
டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற…