குஜராத் மாநிலம் பாவ்நகரை சேர்ந்த காதல் ஜோடி சோனி ரத்தோட் (22), சஜன் கக்னா பரையா (26). இவர்கள் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் நேற்று திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. சரியாக ஒரு மணி நேரத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகன் மணமகளை கொலை செய்துள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விசாரணையில் காதல் ஜோடி திருமணம் செய்யவிருந்த நிலையில், இருவருக்கும் அதிகாலை நேரத்தில் வரதட்சணை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் சஜன், இரும்பு குழாயால் தாக்கியதில் சோனி உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவான சஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
