தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம், கொஸ்கி நகராட்சிக்குட்பட்ட போதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த டிஜே இசையின் தீவிரமான சத்தத்திற்கு 17 வயதான ரவிதேஜா என்ற சிறுவன் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி கீழே சுருண்டு விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கொஸ்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். டிஜே இசையின் அதிகப்படியான சத்தம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் திருமண வீடு சோகமயமாக மாறியுள்ளதுடன், அப்பகுதி முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன…
தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை…
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் வைத்துப் பொதுப்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.…
பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில்…