ஆசை 60 நாள் தான்.. ரெண்டு பேரும் தாலிக்காட்டாமலே.. பப்லு – ஷீத்தல் பிரிவு.. எரியுற நெருப்புல எண்ணெயை ஊத்திய பயில்வான்..

By Begam

Updated on:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிருத்திவிராஜ். இவர்கிட்டத்திட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார். இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது என் மனைவி தான் என்று 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை  அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த சர்ச்சை மிகப் பெரிதாக வெடித்தது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஆர்ட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும் போது இத்திருமணம் தேவையா..? என ரசிகர்கள் பலவாறு கேள்விகள் எழுப்பினர்.

இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர் இருவரும். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருவரும்  திருமணம் முடிக்காமல் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் .  இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்பொழுது பிரிந்து விட்டதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்திவிராஜ் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் கூறியுள்ளதாவது ‘நடிகர் பிரித்விராஜ் ஷீத்தல் இருவரும் தாலி கட்டாமல் ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், அந்த புள்ளையும் புத்திசாலித்தனமா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னு சொல்லல. பப்லுவும் சொல்லல. லிவிங் டுகெதர் வாழ்க்கை இங்கிலீஷ் காரங்க மாதிரி வாழ்ந்து வந்தாங்க ‘. என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதோ அவரின் பேட்டி..