பாமக மூத்த தலைவரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம. க. ஸ்டாலின் மீது அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக அவர் தப்பிய போதிலும் அலுவலகத்தில் கண்ணாடி மற்றும் கதவு உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. தற்போது ராமதாஸின் ஆதரவாளராக உள்ள இவர் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டவர். திடீரென இவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
