தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள கே.என் நேருவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தியதில் மிரட்டல் வந்தது போலி என தெரியவந்துள்ளது. தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
