திரை பிரபலங்கள் வெளியே செல்லும் பொழுது அவர்களை பற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி விடுவது வழக்கம். அவர்களுடன் செல்பி எடுப்பதும் ,அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் பொதுமக்களுக்கு வாடிக்கையான ஒன்று.
அதேபோல பாலிவுட் நடிகை க்ரிதி சனோனுடன் செல்பி எடுக்க வந்த குள்ள மனிதர் செய்த செயல் அங்கிருந்த அனைவரையும் கோபப்பட வைத்தது. நடிகை க்ரிதி சனோனை ஃபோட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் கூடி இருக்கும் பொழுது குள்ளமான ஒரு மனிதர் செல்பி எடுக்க அந்த கூட்டத்தினள் நுழைந்து க்ரிதி சனோனிடம் சென்றார்.
View this post on Instagram
அவரை அனைவரும் கிண்டல் செய்தனர். இதை பார்த்த நடிகை க்ரிதி சனோன் அவரை அருகில் அழைத்து அவரது ஃபோனை வாங்கி செல்பி எடுத்தார். ஆனால் அந்த குள்ள நபரோ மீண்டும் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இன்னொரு செல்பி எடுங்க என நடிகையை பார்த்து கூறினார். இதை பார்த்த அனைவரும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.