பகீர்!.. ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்.. காட்டில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட காதலி உடல்.. திடுக்கிடும் பின்னணி.!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பி.எஸ்சி (BSc) படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகள் காட்டி, லக்னோவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் அந்த நபர். அங்கு வைத்து அவரைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், யாருக்கும் தெரியாமல் இருக்க அவரது உடலை அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். காணாமல் போன மாணவி குறித்து போலீசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரைப் பிடித்து விசாரித்தபோதுதான் இந்தத் துயரமான கொலைச் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

போலீசாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, லக்னோவின் மஹிபத்பூர் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் இருந்து சில எலும்புகள், தலைமுடி, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை அவர்கள் மீட்டெடுத்துள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த எலும்பு எச்சங்கள், உடைகள் மற்றும் காலணிகள் அனைத்தும் கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண்ணுடையதுதான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி விஷால் பால் என்பவரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

   

இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் உறவு இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமடைந்ததை அறிந்ததும் குற்றவாளி விஷால் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். திருமணப் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்காகவே அவன் அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளான். மேலும், போலீஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற விஷால், போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் போலீசார் அவனது காலில் சுட்டுப் பிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.