யாருமே பார்க்கலையா…? நடுரோட்டில் தூக்கில் தொங்கிய உடல்… வாலிபரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்…. நடுங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் வராங்கல் திரி-சிட்டி பகுதியான ஹனம்கொண்டா சுபேதாரி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள பிரதான சாலையில், இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரத்தில் பிணமாகக் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் மிகுந்த பிரதான சாலையிலேயே அந்த இளைஞரின் சடலம் கிடந்த போதிலும், அவரை யாரும் சரியான நேரத்தில் கவனித்து காப்பாற்ற வில்லையா அல்லது என்ன நடந்தது என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

   

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுபேதாரி போலிஸார், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் யார், அவர் எப்படி இறந்தார், கொலையா அல்லது அசம்பாவிதம் ஏதேனும் நடந்ததா என்பது குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.