“எங்களுக்கும் மனசாட்சி இருக்குப்பா…!” – டெல்லி போராட்டத்தின் நடுவே தஞ்சம் கொடுத்த… ‘ப்ளூ டோக்காய்’ காபி கடையின் அதிரடி முடிவு…! பாராட்டும் நெட்டிசென்கள்…!!

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

டெல்லியின் ஜன்பத் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, ‘ப்ளூ டோக்காய்’ காபி நிறுவனத்தின் கிளை ஒன்று போராட்டக்காரர்களுக்கு உதவியது. அங்கு பாதுகாப்பு தேடி வந்த போராட்டக்காரர்களுக்கு அக்கிளை ஆதரவளித்ததாக, நிறுவனத்தின் இணை நிறுவனர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்து, தங்கள் குழுவைக் குறித்து மிகவும் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழலில், காவல் துறையினரின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவும், ஓய்வெடுக்கவும் அப்பகுதியில் இருந்த காபி கடையில் போராட்டக்காரர்கள் தஞ்சமடைந்தனர். அக்குழுவினர் அவர்களுக்கு தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தையும், குடிநீரையும் வழங்கி உதவியுள்ளனர். மேலும் அங்கு அமைதியான சூழலை பராமரிக்கப் பணியாளர்கள் உதவினர்.

   

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் ப்ளூ டோக்காய் நிறுவனத்தின் மனிதநேயமிக்க இந்தச் செயலைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், இச்சம்பவம் குறித்த மாறுபட்ட கருத்துகளும் விவாதங்களும் இணையத்தில் எழுந்துள்ளன.