மலையேற போலீசார் அனுமதிக்காததால், 16 கால் மண்டபம் பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் இருந்து வந்த சாமி ஊர்வலம், அப்படியே திரும்பி சென்றது இதனையடுத்து திருப்பரங்குன்றம் கோயில் முன்பு திரண்டிருந்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
