தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு பனிப்போரை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாகவே, மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் இந்தத் திட்டத்தின் பின்னணியில் ஒரு வலுவான அரசியல் கணக்கு உள்ளது. புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியன் தரப்பு உள்ளிட்ட சிறிய கட்சிகளைத் தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதன் மூலம், சுமார் 50 தொகுதிகளில் தங்கள் சின்னத்தை நிலைநிறுத்த பாஜக விரும்புகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் தாமரை சின்னத்திற்கான வாக்குச் சதவிகிதத்தை உயர்த்திக் காட்டவும், எதிர்காலத்தில் அந்தந்தப் பகுதிகளில் கட்சியின் அடித்தளத்தைப் பலப்படுத்தவும் டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், பாஜகவின் இந்த அதிரடித் திட்டம் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பாமக தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், மேலும் 50 தொகுதிகளில் தாமரை சின்னம் நின்றால், அது அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற அடையாளத்தைச் சிதைத்து, பாஜகவே கூட்டணியை வழிநடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என அவர் அஞ்சுகிறார். மேலும், இரட்டை இலை சின்னம் இல்லாமல் சிறிய கட்சிகள் போட்டியிடுவது ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பையும் பாதிக்கும் என்பது எடப்பாடியின் கணிப்பாக உள்ளது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், சிறிய கட்சிகள் அனைத்தும் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். இந்த அதிகாரப் போட்டி மற்றும் சின்னம் தொடர்பான இழுபறியைத் தீர்க்கவே அவர் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகே அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) பரப்புரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் தாடி பாலாஜி திடீரென விலகியுள்ளார். கடந்த ஆண்டு…
அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…