தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க அதற்கான திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்க மறுப்பக்கம் கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடோடு அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கின்றார்.
இப்படியான நிலையில் தமிழக பாஜக திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருக்கும் பைக் ரேசர் அலிஷா அப்துல்லா, கட்சியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்த அவரை நயினார் நாகேந்திரன் வந்த பிறகு புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய X தள பக்கத்தில், தீமைக்கு அங்கீகாரம் கொடுக்காத இடத்திலும், உழைப்புக்கு உயர்வு கொடுக்காத இடத்திலும் ஒருபோதும் இருக்காதே என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து அவர் பாஜகவில் இருந்து விலக உள்ளதாக செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
திறமைக்கு அங்கீகாரம் கொடுக்காத இடத்திலும்.உழைப்புக்கு உயர்வு கொடுக்காத இடத்திலும் ஒருபோதும் இருக்காதே – சுயமரியாதை pic.twitter.com/ABOjhUC358
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) August 7, 2025
