“கோவை வீடுகளின் பின்புறம் கேட்கும் மர்ம சத்தம்”.. எட்டிப்பார்த்த பெண்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…. நடுராத்திரியில் அல்ல, காலை 8 மணிக்கே கோவையில் நடந்த பயங்கரம்….!

Spread the love

கோவை மாநகரில் தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்தும், வீடுகளின் பின்புறம் நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டியும் அச்சுறுத்தி வந்த 38 வயது ஆசாமியை கவுண்டம்பாளையம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், நேற்று காலை தனது வீட்டின் பின்புறப் பகுதியில் ஏதோ சத்தம் கேட்பதைக் கேட்டு எட்டிப் பார்த்துள்ளார். அங்கு கோவில்மேடு, சாந்தி வீதியைச் சேர்ந்த முருகன் என்ற நபர் ஆடையின்றி நிர்வாணமாக நின்று கொண்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து மிகக் கொடூரமான முறையில் ஆபாச சைகைகள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறி கூச்சலிடவே, அவரது கணவர் ஓடி வருவதைப் பார்த்த அந்த ஆசாமி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடி உள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோதுதான், அந்தப் பகுதி மக்களிடமிருந்து பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின. இந்த ஆசாமி தொடர்ந்து இதேபோன்று பல வீடுகளின் முன்பாகவும், காலி இடங்களிலும் நிர்வாணமாக நின்றுகொண்டு, அந்த வழியாகத் தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து ஆபாச சைகைகளில் ஈடுபட்டு அச்சுறுத்தி வந்ததை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. பெண்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய இந்த நபரின் செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே நீண்ட நாட்களாகவே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதமும் இதே நபர் இதுபோன்ற அநாகரிகச் செயலில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அப்போது விரைந்து வந்த போலீஸார் அந்த ஆசாமியைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக, இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று போலீஸார் அவரை எச்சரித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்திருந்தனர். இருப்பினும், போலீஸாரின் எச்சரிக்கையை மதிக்காமல், தனது புத்தியை மாற்றிக் கொள்ளாத அந்த ஆசாமி மீண்டும் நேற்று அதே பகுதியில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் கடுப்பான பொதுமக்கள் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆசாமியைப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 78, 79 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அந்த ஆசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் கோவையில் உள்ள பெண்களிடையே பெரும் பரபரப்பையும், தற்காலிக அச்சத்தையும் ஏற்படுத்தினாலும், போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

3 minutes ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

7 minutes ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

7 minutes ago

பகீர்.. கள்ளகாதலனுக்காக தூங்கிய கணவனை தீர்த்துக்கட்டி.. வீட்டின் அருகே புதைத்த மனைவி…!

கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…

7 minutes ago

“அவ கத்தினா.. அதான் கல்லால் அடிச்சோம்!”.. காதலனின் நண்பனுடன் படுக்க மறுத்த காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. மிர்சாபூரை உலுக்கிய மெகா கிரைம்.. போலீசின் அதிரடி வேட்டை..!!!

ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும்…

13 minutes ago

“அவர் கதை படிச்சா நான் தற்கொலை பண்ணிப்பேன்!”.. எஸ்பி ஆபீசுக்கு வந்த ஆச்சார்யாரின் மனைவி.. ஆச்சார்யார் குடும்பத்தை கதற வைக்கும் வினோத பின்னணி..!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்திலுள்ள கெடுபுரா கிராமத்தில், இன்று (மே 25, 2026) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 'ஸ்ரீமத் பாகவத கதை' பாராயண…

23 minutes ago