விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா இருக்கும் நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர்.
போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க்கும் நிறைவடைந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ரயான் பைனலுக்குள் நுழைந்துள்ளார். இந்த நிலையில் முந்தைய சீசன்களை போலவே ஷோவின் இறுதிக்கட்டத்தில் முன்பு எலிமிமினெட் ஆன போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அதாவது சாச்சனா, தர்ஷாகுப்தா ,அர்னவ், சிவகுமார், ரவீந்தர் சந்திரசேகர், ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் தான் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். இவர்கள் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களுடன் மோத உள்ள நிலையில், ஒருவேளை வைல்டு கார்டு போட்டியாளர்கள் வெற்றிபெற்றால் இருவர் ரீபிலேஸ் செய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த வாரம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் பாட்டு ஒலிக்கும் போது அனைவரும் தங்கள் டாஸ்கை செய்ய வேண்டும். அதன்படி போட்டியாளர் ரவீந்தருக்கு பாட்டு ஒலிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னால் முயன்ற அளவுக்கு ஆடியுள்ளார். அவருடைய இந்த ஆட்டம் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் இயக்க வைத்துள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 8, 2025