விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக small boss வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்ஷனுக்கு சில போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் முதல் ஷாப்பிங் ரீபிளேசிங் டாஸ்க் “வெயிட் பார்ட்டி’ என்ற பெயரில் இடம்பெறுகின்றது. மேலும் இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்அப் பொருட்கள் அனைத்தும் உங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குறித்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். இதனால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படுவதோடு, மேக்கப் இல்லாமல் ஒருநாள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.
அத்தோடு பெண்கள் அனைவரும் தங்களுடைய மேக்கப்பை நீக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தசமயத்தில் பிரதீப் ஆண்டனி மணி சந்திராவிடம் ஏதோ குறை கூறிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பூர்ணிமா ரவி “இந்த டாஸ்க்கில் தோற்பது நல்லது தான். ஏனென்றால் பெண்கள் தங்கள் மேக்கப்பை துறப்பீர்கள். உங்களுடைய அப்பாவியான முகம் வெளிப்படும். அது எனக்கு வாய்ப்பாக அமையும்” என பிரதீப் சொன்னதாக கூறுகின்றார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…