திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணவ்… பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன..? வெளியான பரபரப்பு புரோமோ..!

By Soundarya on மார்கழி 17, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

   

இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் போட்டியாளர் சத்யா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

   

 

அவரைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக காதல் கன்டென்ட் கொடுத்து வந்த நடிகை தர்ஷிகா வெளியேறியுள்ளார். இதனையடுத்து போட்டியாளர்கள் நாமினேஷன் நடந்து முடிந்து. கேப்டன்ஷிப் டாஸ்க் நடந்து முடிந்தது. தற்போது செங்கலை வைத்து டாஸ்க் நடக்கிறது. இதில் பவித்ரா சௌந்தர்யா, ஜாக்குலின் , ஆகியோர் விளையாடும் போது பவித்ராவிடமிருந்து ரணவ் செங்கலை பிடுங்கும்போது ஜெப்பிரி தள்ளி விடுகிறார். அப்போது ராண

#image_title

வுக்கு அடிபட்டு கீழே விழுகிறார்.

 

ஆனால் அன்ஷிகா அவன் நடிக்கிறான் என்று சொல்கிறார். அருண் அவரை உடனே confetion ரூமிற்கு அழைத்து செல்கிறார். திடீரெனெ பிக்பாஸ் ராணவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)