விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த நிலையில் முதல் படமே லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்திருந்தார்.

சினிமாவில் சைடு ரோலில் நடித்து வந்த இவரை சீரியல் ஹீரோயினியாகி அழகு பார்த்தது விஜய் டிவி தான். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்ற சீரியலில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் முடிவடைந்த கையோடு இவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பைனல் வரை சென்ற இவர் பணப்பெட்டியை எடுக்க ஆசைப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் திரும்ப முடியாததால் கண்ணீருடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதே சமயம் பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக முறை நாமினேட்டான போட்டியாளர் என்ற சாதனையையும் ஜாக்குலின் படைத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜாக்களின் காதலர் தினமான இன்று தன்னுடைய காதலர் யார் என்பதை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

யுவராஜ் செல்வநம்பி என்பவரை ஜாக்குலின் காதலித்து வரும் நிலையில் காதலர் தினத்திற்காக நீதானே என் பொன்வசந்தம் என்ற பாடலுடன் யுவராஜை ஜாக்குலின் டேக் செய்த இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் ஜாக்குலின் பகிர்ந்துள்ள நிலையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
