தமிழ் சினிமாவிலேயே ஒரு ஹாலிவுட் படம் ‘இணைந்த கைகள்’.. ராஜமௌலியே அந்த சீனை இந்த படத்தில்தான் சுட்டாரா?..

By vinoth on மாசி 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 1980 களில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாறியவர் ராம்கி. சின்னப் பூவே மெல்லப் பேசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹேண்ட்சம் நடிகரான ராம்கி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

அதன் பின்னர் வரிசையாக படங்களில் நடித்த அவருக்கு மருதுபாண்டி, செந்தூரப் பூவே, பறவைகள் பலவிதம், இணைந்த கைகள்,  வனஜா கிரிஜா உள்ளிட்ட படங்கள் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.  ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் மார்க்கெட்டில் நிலைக்க முடியவில்லை.

   

ராம்கி, அருண் பாண்டியன், ஆபாவாணன் என திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்த மாணவர்கள் எல்லாரும் தமிழ் சினிமாவில் ஒரு புது ரூட்டில் கலக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய ஒரு ஆக்‌ஷன் திரைப்படம்தான் ‘இணைந்த கைகள்’.

   

 

ஹாலிவுட் சினிமா ஸ்டைலில் எதிரி நாட்டு சிறையில் இருக்கும் ஒரு கைதியைக் காப்பாற்ற இரண்டு பேர் சென்று அவரை காப்பாற்றி அழைத்து வருவதும் அதன் பின்னர் வில்லன் கூட்டத்தால் என்ன ஆகின்றனர் என்பதும்தான் கதை. இதை  மிகச்சிறப்பாக ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தாகப் படைத்திருப்பார்கள்.

இந்த படத்தின் இண்டர்வெல் காட்சி அப்போது மிக பிரபலம். அந்தக் காட்சியை சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் ராஜமௌலியும் ஒரு முக்கியமானக் கட்டத்தில் பயன்படுத்தி இருப்பார். இந்த படம் குறித்து பல ஆண்டுகள் கழித்துப் பேசிய ராம்கி “அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் 30 நாட்கள் படமாக்கினோம்” என்று கூறியுள்ளார்.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நெருக்கடியான ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும்.