#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. இந்த வீட்டிற்குள் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வதும், கேலி கிண்டல் செய்து கொள்வதும் சண்டையிடுவதும் வழக்கமான ஒன்றுதான்.
#image_title
இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே நிக்சன் வினுஷா தேவியை bodyshaming செய்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவர் அர்ச்சனாவை குறித்து பேசியது சில வாரங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நிக்சன் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த பொழுது, அர்ச்சனா சமையல் டீமில் இருந்தார்.
அப்பொழுது விசித்ரா, நிக்சன், ரவீனா மூன்று பேரும் அமர்ந்திருக்க நிக்சன், அர்ச்சனாவை பார்த்து ‘இவளை எல்லாம் கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கணும். இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்க கூடாது’ என்று கூற விசித்ரா, ரவீனா இருவரும் சிரித்திருக்கின்றனர். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர் .ஆனாலும் கமலஹாசன் இதைப்பற்றி வார இறுதியில் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் பெற்றோர்கள் வருகை தந்துள்ளனர். அப்பொழுது அர்ச்சனாவின் அப்பா நிக்சனின் கையைப் பிடித்து, ‘அன்னைக்கு நீங்க இவளை எல்லாம் கள்ளிப்பால் கொடுத்துக் கொண்டு இருக்கணும். அப்படின்னு பேசினது என் மனச ரொம்ப வேதனைப்படுத்திடுச்சு’ என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ஒரு தந்தையா அவரோட மனசு எப்படி கஷ்டப்பட்டு இருக்கும்? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…
தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…