விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 30 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா என 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள மொத்தம் 15 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் இந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினர். இவர்களை தொடர்ந்து பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அண்ணா பாரதி, RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர்.
தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்தவர்களை வைச்சு செய்து வருகின்றனர் ஏற்கனவே உள்ளிருந்த பிக் பாஸ் ஹவுஸ்மாட்ஸ். இதனால் தற்பொழுது பெரிய கலவரமே அங்கு நடந்து வருகிறது. இந்த 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருப்பவர் தான் மேடை பேச்சாளர் அண்ணா பாரதி. இவர் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகை. விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டிலும் ஒளிபரப்பப்படும் ‘பட்டிமன்றம்’ நிகழ்ச்சிகளில் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
கோயில் விழாக்கள், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல இடங்களில் தனது சொந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். அதோடுமட்டுமின்றி இவர் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட யூடியூப் சேனலை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவர் தனது சொந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகள், நகைச்சுவை பேச்சுகள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம் சலாசி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும்…
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த தற்போதைய நிலவரம் அரசியல் களத்தில்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த…
மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் (Cooch Behar) மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், அம்மாநில வாக்காளர்…
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முரளி வேல் என்பவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வரதலட்சுமி (23). இவர்களுக்குத் திருமணம் முடிந்து…
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நடைபெற்ற இந்த 15 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. …