#image_title
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சீரியலில் அவரின் நடிப்புக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்ததோடு விஜய் டெலிவிஷன் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருந்தார்.
பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இதற்கிடையே ஆல்பம் சாங் ஒன்றில் நடித்த அவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் வொயில் கார்டு எண்றியாக அறிமுகமான இவர் முதலில் அழுமூஞ்சி என்று பெயரெடுத்தாலும் அதற்கு பிறகு ஹவுஸ் மேட் ஒவ்வொருவரையும் கதற விட்டிருந்தார்.
இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானது. அந்த நிகழ்ச்சியில் பல தடைகளை தாண்டி பைனல் வரை வந்த அர்ச்சனா முதல் பரிசையும் தட்டிச் சென்றார். 50 லட்சத்துக்கான காசோலை ஒரு புது கார் வீடு ஆகியவை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு சென்றாலும் இவருக்கு பாராட்டுகளும் புகழ்ச்சிகளும் அதிகரித்து வருகின்றது. இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தான் ஒரு புது கார் வாங்கி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய காரை வாங்கி இருக்கின்றார். மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா என்ற காரை புதுசாக வாங்கி இருக்கின்றார். இந்த காரின் விலை மட்டும் 11 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. தனது குடும்பத்தினருடன் சென்று இந்த காரை வாங்கி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க…
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு…
நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.…
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்…
நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ்…