பிக்பாஸ் தமிழ் சீசன் 8 சமீபத்தில் முடிவடைந்தது . 100 நாட்களை வெற்றிகரமாக இந்த சீசன் டாக்சிக் இல்லாத சீசன் என்று பெயர் பெற்றிருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புறம் பேசிக் கொண்டும் இல்லாமல் அனைவரும் விளையாட்டு முனைப்போடு விளையாடினார்கள். மற்ற சீசன்களை விட இந்த சீசன்களில் பல ட்விஸ்ட்டுகள் இருந்தது. ஆரம்பமே கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்று தான் இந்த சீசன் தொடங்கியது. அதற்குப் பிறகு சீசன் நடுப்பகுதியில் அனைவரும் ஒன்றாக விளையாடலாம் என்று கூறிவிட்டார் பிக் பாஸ்.
அதே போல் கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கூட இதுவரை எந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக நடைபெற்றது. 24 போட்டியாளர்கள் உள்ளே வந்து டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகியோர் இருந்தார்கள். இதில் ரயான் முதலாவதாக எலிமினேட் ஆனார். பின்பு பவித்ரா எலிமினேட் ஆனார். கடைசியாக விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.
இறுதியில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இரண்டு பேரும் மேடையில் இருந்த நிலையில் முத்துக்குமரன் winner ஆகவும், சௌந்தர்யா Runner ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சௌந்தர்யா அளித்த முதல் பேட்டியில் PR குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், பிக் பாஸ் என்பதை நான் ஒரு படமாக தான் பார்க்கிறேன். எனக்கு ஒண்ணுமே தெரியாத ஒரு விஷயத்தை கொள்ள நான் போகும் போது நான் அதுக்கு ப்ரொமோஷன் பண்ண வேண்டும். எனக்காக மார்க்கெட்டிங் நான் தானே பண்ணிக்க முடியும். மக்கள் மத்தியில் நான் பிரபலமாக வேண்டும் என்றால் எனக்கு தேவை.
அதுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி என் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் குடுத்துட்டு வந்தேன். பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் பெட்டி ஓபன் பண்ணும் போது PR என்று பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு. அங்க இருந்த எல்லோருமே அதிகமா என்னோட பேர தான் சொன்னாங்க. ஆனா வெளியில வந்து பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எல்லோரும் PR வச்சிருந்தாங்க. ஆனா பிக்பாஸ் வீட்ல எல்லாமே என் பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இருந்தாலும் நாம என்னதான் ப்ரமோஷன் பண்ணாலும் மக்களுக்கு நம்மள புடிக்கணும். அவங்க கையில தான் போன் இருக்கு. அவங்களுக்கு நம்மள புடிச்சிருந்தா தான் ஓட் பண்ணுவாங்க என்று சௌந்தர்யா சொன்ன இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…