குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் இன்று வெளியாக உள்ள திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் பிரிவியூ காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்றிருக்கும் குரு சோமசுந்தரம், பாட்டில் ராதா என்ற படத்தின் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழாவின்போது இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சை சர்ச்சையை கிளப்பியது. அதாவது இளையராஜாவை மரியாதை குறைவாக வாடா போடா என்று பேசியும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பிய நிலையில் மிஸ்கின் பேச்சுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
மேடை நாகரிகம் அறிந்து அவர் பேச வேண்டும் என்று கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர். மிஸ்கின் சர்ச்சை பேச்சு குறித்து குடும்பஸ்தன் படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க வந்த குரு சோமசுந்தரத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் லிஸ்கின் பேச்சுக்கு வித்தியாசமான விளக்கம் அளித்தார். இது குறித்து பேசிய அவர், மிஸ்கின் பேச்சை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். இதில் தவறு உள்ளது. உயர்ந்த விஷயங்களை, கடவுளைக் கூட நாம் அவன் இவன் என்கிறோம். என்னடா இப்படி என்ன படுத்துற என சாமியை சொல்லுவோம்.
இளையராஜா ஜீனியஸ்களுக்கெல்லாம் ஜீனியஸ். அவர் மரியாதை எல்லாம் தாண்டியவர். மிஸ்கின் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான் சப்போர்ட் பண்ணல. சில சமயங்களில் பயங்கரமான வேலையை பார்த்தவர்களிடம் என்னடா இப்படி பண்ணிட்டியே என ஆச்சரியமாக சொல்லுவோம் இல்லையா. அந்த நேரத்தில் சொல்லும் டா, இவன் போன்ற வார்த்தைகள் மரியாதை குறைவானது இல்லை. அதுபோலத்தான் இதுவும் என்று குரு சோமசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…