மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு எடுத்த முடிவு… அதிரடி அரசாணை வெளியீடு…

By admin on ஐப்பசி 12, 2024

Spread the love

பெண்களுக்கு நம் நாட்டில் முழுமையான பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத சில கொடூரமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதை பார்க்கும் பொழுதெல்லாம் மக்களின் மனம் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் மனம் பதறுகிறது. அந்த அளவுக்கு கொடூர குற்றச் செயல்கள் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

   

பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அதற்குப் பிறகு துன்புறுத்துவது மட்டும் இல்லாமல் கொலை செய்வது போன்ற செயல்கள் அச்சமின்றி இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இதற்கு என்னதான் முடிவு என்று கேட்டால் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கிறது.

   

பெண்களின் பாதுகாப்பிற்காக குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தமிழக அரசு ஒரு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. அது என்னவென்றால் மாணவிகளுக்கு தற்காப்பு கலையை பயிற்சி அளிக்கும் ஒரு முன்னெடுப்பை எடுத்து அதனுடைய அரசாணையும் வெளியிட்டு இருக்கிறது.

 

அரசு உதவி பெறும் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் இருக்கும் பெண் குழந்தைகள் அல்லது மாணவிகளுக்கு உடனடியாக தற்காப்பு கலையை கற்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்காக ரூ. 1.12 கோடி நிதியை ஒதுக்கி இருக்கிறது. இதன் மூலம் 1400 மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை கண்காணிக்கவும் திட்டமிடவும் மாவட்ட சமூக நல ஆர்வலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.