தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்படுபவர் மூத்த இயக்குனர் பாரதிராஜா. 84 வயதான நிலையில் உடல் நலத்தில் முதுமையால் வரும் பாதிப்புகள் மற்றும் கடந்த ஆண்டில் அவரது ஒரே மகன் மனோஜ் மறைவு காரணமாக பாரதிராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குனர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்தி பரவிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை அளித்து, அவர் சிகிச்சையில் இருப்பதாக உறுதி அளித்தது. இயக்குனர் ஆர்கே செல்வமணி தலைமையிலான இயக்குனர்கள் குழுவும் மருத்துவனைக்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தது. அவரது உடல் நிலையில் மாற்றம் இல்லை என்றாலும் தீவிர சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீட்டிலிருந்து தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். ஆனாலும் அவரை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை. அவர் மறதி மற்றும் சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். பல்வேறு பொய்கள் வதந்திகளுக்கு மத்தியில் 84 வயதான அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. அவர் நலமுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…