பூர்ணிமாவிடம் ஐ லவ் யூ சொல்ல ரொம்பவும் சிரமப்பட்ட பாக்யராஜ்.. இதுவரை பலரும் அறியாத சுவாரசிய காதல் கதை..!

By Nanthini on பங்குனி 11, 2025

Spread the love

இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். முன்னணி இயக்குனரான பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பாக்யராஜ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளார். கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் பாக்யராஜ் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், விடியும் வரை காத்திரு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்களில் பாக்யராஜ் நடித்தார். அந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார்.

   

இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் இருக்கின்றனர். பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் சாந்தனு நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளரான கீர்த்தியை சாந்தனு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜுக்கு சரண்யா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் தனது காதல் கதை குறித்து பாக்கியராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், சினிமாவுல ஐ லவ் யூ சொல்றது ரொம்ப ஈசி. ஆனா ரியல் லைப்ல அது ரொம்பவே கஷ்டம். பூர்ணிமா மீது எனக்கு காதல் வந்துருச்சு.

   

 

ஆனா அப்போ அவங்க சினிமாவில் பிஸியா நடிச்சிட்டு இருந்தாங்க. எப்படி சொல்றதுன்னு தெரியல. சரி வேணாம்னு விட்டுட்டேன். அதுக்கப்புறம் காரில் பூர்ணிமா கிளம்பும்போது பாரிஸ் போனா போன் பண்ணுங்க என்று சொன்னேன். எதற்கு அங்க போய் போன் பண்ண சொல்றாங்க என்று பூர்ணிமா ஷாக் ஆயிட்டாங்க. அதுக்கப்புறம் ஒரு வாரம் ஆகியும் பாரிஸில் இருந்து எந்த போன் காலும் லெட்டரும் வரல. சரி அவங்க நிறைய பிரபலங்கள் கூட நடிச்சிட்டு இருக்காங்க ரொம்ப பிசியா இருக்காங்க என்று நானும் விட்டுட்டேன். பிறகு என்னுடைய அசிஸ்டன்ட் இளமுருகன் ஒருநாள் என்கிட்ட வந்து சார் உங்களுக்கு பேரிஸில் இருந்து ஒரு தீவிர ரசிகை போன் பண்ணாங்க நான் இங்க பிசியா இருக்கீங்க இனிமே போன் பண்ணாதீங்கன்னு சொல்லி வச்சுட்டேன் என்று சொன்னாரு.

அதைக் கேட்டதும் என்ன சொன்ன பாரிஸில் இருந்து போன் வந்ததா என்று கேட்டுட்டு என்ன பண்றதுன்னு தெரியாம பிஆர்ஓ செல்வம் மூலமாக எங்க இருக்காங்க என்று விசாரித்து போன் நம்பர் வாங்கி போன் பண்ணேன். அப்போ வேற ஒருத்தர் போன் எடுத்ததும் நான் பாக்கியராஜ் பேசுறேன் என்று சொன்னவுடன் அவர் அங்கு இருக்கவங்க எல்லாரும் முன்னாடியும் கத்தி பூர்ணிமா மேடம் உங்களுக்கு பாக்கியராஜ் சார் போன் பண்ணி இருக்காங்க என்று கத்தி சொன்னாரு. அதன் பிறகு எனக்கு எதுக்கு அவர் போன் பண்ணி இருக்காரு என்று யோசித்தபடி பூர்ணிமா என்னிடம் வந்து போன் பேசினாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா திக்கி திணறி தான் அவங்க பாரிஸில் இருக்கும்போது போன் கால் மூலமாக ஐ லவ் யூ சொன்னேன் என்று தான் முதன்முதலாக ஐ லவ் யூ சொன்ன சுவாரஸ்ய சம்பவம் குறித்து பாக்கியராஜ் பகிர்ந்துள்ளார்.