தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர். புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது பயனித்து வருகிறார்.
ஹாலிவுட்டில் மார்ட்டின் ஸ்கார்சேசி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்ற இயக்குனர்கள் இப்போதும் வெற்றிகரமான இயக்குனர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் நம் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சிய பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமா மார்க்கெட்டில் நிலைக்க முடியாமல் வெளியேறிவிட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டு விட்டனர்.
தன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது குறித்து பாக்யராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நானே ஹீரோவாகவும் நடித்ததால் என்னால் என் இமேஜுக்கு ஏற்றவாறான கதைகளை மட்டுமே ஒரு கட்டத்தில் எழுத முடிந்தது. நான் நடித்த விடியும் வரைக் காத்திரு போன்ற த்ரில்லர் படங்களை அதன் பின்னால் என்னால் எழுத முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…